குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

‎நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‎அடையாளம்… Continue reading குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

*நேபாள வெள்ளம்: 150-க்கும் மேற்பட்டோர் பலி; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம்!*

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளம் மற்றும் சேற்றுச்சரிவில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மாயம். மாயமானவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள், 54 பேர் அமெரிக்கர்கள், 34 பேர் ஆஸ்திரேலியர்கள், 33 பேர் பிரிட்டன் நாட்டவர்கள் என நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட நேபாளர்களும் மாயமாகியுள்ளனர்; பாதிக்கப்பட்ட பகுதி யாத்திரிகர்கள் மற்றும் மலையேற்றப் பயணிகளிடையே பிரபலமானது.Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்