*பலூன் விழுங்கி 6 வயது சிறுவன் உயிரிழப்பு*

நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துணி வியாபாரி குமார் மற்றும் சத்தியா தம்பதியரின் மகன் சோமநாத் எதிர்பாராதவிதமாக பலூனை விழுங்கியதாக கூறப்படுகிறது.பலூன் தொண்டையில் மாட்டிக்கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுவன் மயங்கி கீழே விழுந்தான். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை நாட்றம்பள்ளி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.சிறுவனை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்ததாக கூறி தொண்டை குழியில் சிக்கியிருந்த பலூனை அகற்றினர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *