விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 9,000 கனஅடியை 15 நாட்களுக்கு திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
Author: Ananda Kumar
வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.உலகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
பணியின் போது அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்து கொள்ளலாம் என வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை கருத்து.அரசின் அனைத்து பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் ஆன நிலையில் விதி வகுக்கப்பட வேண்டும்.நிபந்தனை விதிக்கப்பட்டால் அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த உதவும் – நீதிபதி கருத்து.-வழிகாட்டுதல்கள் அல்லது அரசாணையை வெளியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? -கலா என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை ஆணை. Dr ஆ.ஆனந்தகுமார்… Continue reading அரசு ஊழியர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
நமது பத்திரிகை ஆசிரியர் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் அவர்களுக்கு
நமது பத்திரிக்கை ஆசிரியர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது துணை ஆசிரியர் S.கண்ணன்Bcoml
அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகை
Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குழு
அம்பேத்கரின் சமூக விளக்கு தமிழ் மாத பத்திரிகை இணையதளம் 28/08/2026 துவக்கம்…
A S V பத்திரிகை இணையதளம் நமது நிறுவனர் ஆசிரியர் வெளியீட்டாளர் Mr Dr ஆ.ஆனந்தகுமார் அவர்கள் வெளியீடு அவருக்கு அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்து பல்லாண்டு வாழ குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம எழுத்தாளர் ஆ.ஷாலினி
*நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*
அரசு நிகழ்வை முடித்துவிட்டு, முதல்வர் விஜய் வந்து கொண்டிருக்கிறார். அவர் தலைமையில் நேபாள சம்பவம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான அவசரக் கூட்டம் நடைபெற உள்ளது.குரோம்பேட்டை டிராவல்ஸ் நிறுவனம் நேபாளத்திற்குஆன்மிக சுற்றுலா சென்ற மேலும் 49 தமிழர்கள் மாயமாகி உள்ளனர்.நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது. தகவல் தொடர்பு துண்டிப்பு – மாயமானோர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. கும்பகோணத்தில் இருந்து சென்ற 57 பேரில் 21 பேர்… Continue reading *நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களின் விபரங்களை பெறுவதில் தாமதம் – அமைச்சர் ராஜ்மோகன்.*
தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.
நேபாள நாட்டில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 160 பேர் உயிரிழப்பு, 750 பேரை காணவில்லை என செய்திகள் வருகின்றன. சுற்றுலா சென்ற 110 இந்தியர்கள் சிக்கியுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.எத்தனை தமிழர்கள் சிக்கியுள்ளனர்? அவர்களில் எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளார்கள்.தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்களா? ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இதில் அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்-சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.Dr… Continue reading தமிழர்களை மீட்க என்ன நடவடிக்கை? – உதயநிதி ஸ்டாலின்.
*ஈஷா மூலம் யாத்திரை சென்ற 80 பேரின் நிலை தெரியவில்லை – ஜக்கி வாசுதேவ்.*
தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம்.கியிரோங் வெள்ளத்தில் காணாமல்போன எங்கள் குழுவைச் சேர்ந்த 80 பேர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.மீட்புப்பணிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டோம்.எங்களின் ஒரே நோக்கம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் துணை நிற்பதும், அவர்களுக்கு உதவக்கூடிய ஏதேனும் தகவல், தடயங்களைத் தேடுவதில் உதவுவதும்தான் – ஜக்கி வாசுதேவ் Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*நேபாள சம்பவம்:டெல்லி செல்லும் அமைச்சர்கள்.*
நேபாளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்கவும், நிவாரணப் பணிகளைக் கண்காணிக்கவும் முதலமைச்சர் விஜய் உத்தரவு.மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆணை.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்ப முதலமைச்சர் ஆணை.அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோரையும் டெல்லி செல்ல முதல்வர் விஜய் உத்தரவு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்