*தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி.*

தேவையற்ற சூழல்களில் தங்கம் வாங்குவதை தவிர்க்க் வேண்டும்.வெளிநாட்டு பயணம் செய்வதையும் வெளிநாட்டு பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வெளிநாடுகளில் திருமணம் நடத்துவதையும் இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.சுயசார்பு இந்தியாவுக்கு முன்னுரிமை அளித்து நாட்டிலேயே தயாரிக்கப்படும் பொருட்களை வாங்க வேண்டும் -பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள். நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

*காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை.*

விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 9,000 கனஅடியை 15 நாட்களுக்கு திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உள்ளது – கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

காவிரி நீரில் தமிழகத்துக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கை பெற உரிமை உள்ளது. காவிரி விவகாரம் சட்டரீதியாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. அணைகளில் இருந்து வெளியேறும் நீர் வீணாகாமல் தமிழகத்தின் தேவைக்காக பயன்பட வேண்டும் என்பதே நோக்கம். மேகதாது விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமை எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்பதில் உறுதி. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு உருவாக்க கர்நாடக அரசு முயற்சி-கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்.

30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் யாசகம் பெற்று வாழ்ந்து மறைந்த மூதாட்டி வீட்டில் கண்டெடுக்கப்பட்டது

கர்நாடகவில் யாசகம் பெற்று வாழ்ந்து மூதாட்டி இறந்ததை அடுத்து அவரது வீட்டை ஆராய்ந்து போது 30 மூட்டைகளில் ரூ.8.4 லட்சம் ரொக்க பணம் சேமித்து வைத்திருந்தது கண்டுபிடிப்புமசூதியின் வாயிலில் யாசகம் பெற்று வந்த உன்னிசாவின்(68) மறைவை அடுத்து இந்த பணத்தை அவரது சகோதரர்களுக்கு மசூதி நிர்வாகித்தினர் பிரித்து கொடுத்தனர் Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்