*அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தினமும் தங்களது கைவசம் கொண்டு வரும் சொந்த ரொக்கப் “Personal Cash Register” என்ற பிரத்யேகப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். இந்த ரொக்கப் பதிவேடானது, தினமும் வருகைப் பதிவேட்டுடன் (Attendance Register) சேர்த்து அலுவலகத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, சம்பந்தப்பட்ட கண்காணிப்பாளரால் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும். அலுவலகத் தலைவரின் மேலதிகாரிகள் மாதம் இருமுறை (Bi-monthly) இந்த ரொக்கப் பதிவேடு முறையாகப் பராமரிக்கப்படுகிறதா… Continue reading *அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப்பணத்திற்கு அலுவலக பதிவு முக்கியம் – கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப்.*

குழு நடனக் கலைஞர்களுக்கு குறையும் வாய்ப்புகள்:

தமிழ் சினிமாவில் பெரிய பாடல் காட்சிகளில் group dancers பயன்பாடு குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது; VFX மற்றும் சிறிய நடனக் குழுக்கள் அதிகரிப்பது காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. நமது செய்தியாளர் கு.சிவாஜி ,தர்மபுரி

*பணியின் போது பலியான தூய்மைப்பணியாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை.*

பலியான தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவது தொடா்பாகவும் நடவடிக்கை. தூய்மைப் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு கையுறை வழங்கப்படும்; வரும் காலங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.தூய்மைப் பணியாளா்களுக்காக கழிப்பிடம், உடை மாற்றும் அறைகள் செப்.15ம் தேதிக்குள் ஏற்படுத்தி தரப்படும்.தூய்மைப்பணியாளா்களுக்கு உணவிற்கு பதில் விரைவில் உணவுப்படி வழங்கப்படும்-அமைச்சர் ராஜ்மோகன்.9,512 தூய்மை பணியாளர்களுக்கு யூனிபார்ம் வழங்கப்படுகிறது.மின்னணு பதிவேடு முறையை நீக்கி வருகை பதிவேடு முறை நடைமுறைப்படுத்தப்படும்.சிறப்பு முகாம் நடத்தி விடுபட்டவர்கள் மருத்துவக் காப்பீட்டில் சேர்க்கப்படுவர் -அமைச்சர் ராஜ்மோகன்.… Continue reading *பணியின் போது பலியான தூய்மைப்பணியாளா் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை.*

*டாஸ்மாக்கில் பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு – டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு.*

டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு. இணை ஆசிரியர் இ.விஜயகுமார்

பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44ஆக வழங்கப்படும்.கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலை உயர்வு.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்-சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்.கடந்த சில நாள் முன்பு ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

புதுச்சேரியில் கொலை

நள்ளிரவு கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆனந்தன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர்….** *இவர் மீது பிரபல ரவுடி கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது…..*நமது செய்தியாளர் தீ.தமிழரசன் திருப்பூர்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,14,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.14,370க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260க்கு விற்பனை செய்யப்படுகிறது. துணை ஆசிரியர் A.கல்பனா

*30 நாட்கள் விசா இல்லா பயணம் – உஸ்பெகிஸ்தான் அதிபர் அறிவிப்பு.*

இந்திய குடிமக்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தான் செல்லும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் அரசு முறைப் பயணத்தின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்த அறிவிப்பு வெளியானது.இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*

நேபாளம்: வெள்ளத்தின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து துரிதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி, பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களின் உயிரையும் காப்பாற்றினார்.காலை 9.20 மணிக்கு வெள்ள எச்சரிக்கை கிடைத்ததும், பதற்றமின்றி பள்ளியின் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்து, மாணவர்களை 3 மாடி கட்டடத்தின் மேல்தளத்துக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.பள்ளிக் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்ததால், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்தார்.துரித நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் உயிர் தப்பினர். எனினும், 2… Continue reading *நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*

*விபத்தில் 4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதி உதவி.*

திண்டுக்கல் கொல்லப்பட்டி கிராமத்தில் பால் வேன் மோதி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.விபத்தில் 4 சிறார்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியறிந்து வருத்தமும், வேதனையுமடைந்தேன்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலை அம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு – முதலமைச்சர் விஜய். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்