வரலாற்றுப் பக்கங்கள்காலப்பயணி – “சென்னைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?”

வணக்கம் நண்பர்களே! நான் உங்கள் காலப்பயணி. ஒரு நகரத்திற்குப் பெயர் எப்படி வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?“சென்னை” என்ற பெயருக்குப் பின்னாலும் அப்படியொரு சுவாரசியமான கதை இருக்கிறது! இன்று நாம் கொஞ்சம் காலத்தைப் பின்னோக்கிப் போகலாம். இன்று பரபரப்பாக இயங்கும் சென்னை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சிறிய கடற்கரைப் பகுதிகளையும் கிராமங்களையும் கொண்ட இடமாக இருந்தது. 1639ஆம் ஆண்டு, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தப் பகுதியில் நிலம் பெற்றது. அதன் பின்னர் இங்கு Fort St.… Continue reading வரலாற்றுப் பக்கங்கள்காலப்பயணி – “சென்னைக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?”

தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

கண்ணாடி! ‘என்னைப் பார்த்தாலே எல்லாரும், *கண்ணாடி அழுக்கா இருக்கு!*ன்னு சொல்றாங்க. ஆனால் என்னை அழுக்காக்குறது யாருன்னு யாருமே கேட்க மாட்டேங்கிறாங்க!’ன்னு அது கோபமா சொல்லுது.அதைக் கேட்ட துடைப்பம் துரை உடனே,’அதான் சொல்றேன்ல! என்னையும் வாரம் ஒருமுறைதான் தேடுறாங்க!’ன்னாரு.அப்போ பிரஷ் பாலா வந்துட்டு,’என்னைப் பற்றி யாராவது பேசப் போறீங்களா? இல்ல பல் தேய்க்குற நேரத்துல மட்டும் ஞாபகம் வருவேனா?’ன்னு கேட்டார். அதற்குள் கிருமி கோபால் மெதுவா வந்து,’நீங்க எல்லாரும் சண்டை போடுங்க… நான் இங்கதான் இருக்கேன்!’ன்னு சிரிச்சான்.நான் அவனைப்… Continue reading தூய்மை தான் ஸ்டைல்– நான் சோப் குமார்! “வணக்கம் நண்பர்களே!இந்த மாதம் நான் ஒரு விசித்திரமான புகாரை விசாரிக்கப் போறேன்புகார் கொடுத்தது யாருன்னு தெரியுமா?

ஆலய அரங்கம்

நந்தி அண்ணன் பேசுகிறார்… “ஹர ஹர மகாதேவா! வணக்கம் வாசகர்களே! நான் உங்கள் நந்தி அண்ணன். சிவபெருமானின் அருகில் உட்கார்ந்திருக்கிறேனே தவிர, உலக விஷயங்கள் எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள்! நம் திருத்தலங்களின் பெருமைகளைப் பற்றி நான் நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன்.இந்த மாதம் நாம் செல்லப் போகும் ஆலயம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். கடலும் கந்தனும் சங்கமிக்கும் இந்தப் புனிதத் திருத்தலத்தின் சிறப்பை தெரிந்துகொள்ள என்னுடன் வாருங்கள்!”கடலும் கந்தனும் சங்கமிக்கும் திருத்தலம்தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில்,… Continue reading ஆலய அரங்கம்

சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:

சிறுதானியங்கள் நம் பாரம்பரிய உணவின் முக்கியமான பகுதியாக இருந்தவை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்றவற்றை உணவில் சேர்ப்பது பல்வேறு ஊட்டச்சத்துகளைப் பெற உதவும். குறிப்பாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தேர்வு செய்வது சமச்சீர் உணவின் ஒரு பகுதியாகும். 🍽️ இன்றைய சமையல் – கம்பு காய்கறி அடை தேவையான பொருட்கள் செய்முறை கம்பு மாவுடன் நறுக்கிய காய்கறிகள், கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி… Continue reading சமையல் சிம்மாசனம் சிறுதானியம் – சுவையும் ஆரோக்கியமும்:

குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

‎நாகர்கோவில் – தோட்டியோடு 4 வழிச்சாலையை ஒட்டி உள்ள குதிரைபாஞ்சான் குளத்தில் நேற்று ஆண் சடலம் ஒன்று அரை நிர்வாண நிலையில் கிடந்தது. அந்த ஆண் ஜட்டி மட்டும் அணிந்திருந்தார். உடல் கவிழ்ந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ‎அடையாளம்… Continue reading குளத்தில் சடலமாக கிடந்த இளைஞர்உடலை மீட்டு போலீசார் விசாரணை

*உங்கள் மொபைல் போனை பாதுகாக்கும் சூப்பர் செயலி- தமிழக காவல்துறை விழிப்புணர்வு*

M-Kavach 2 என்பது மொபைல் பாதுகாப்பைச் சரிபார்க்க உதவும் செயலி. இதன் மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம்.சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் செயலிகளைக் கண்டறிவதுடன், Hidden / Sideloaded Apps மற்றும் Hardware-ஐயும் ஸ்கேன் செய்யலாம்.ஆப்ஸ்களின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கலாம்; WhatsApp / SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் பரிசோதிக்கலாம்.ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதியும் இதில் உள்ளது-தமிழக காவல்துறை விழிப்புணர்வு. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*செப்டம்பர்-1: மேட்டூர் அணை திறப்பு.*

வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சரான பின் முதல் முறையாக மேட்டூருக்கு சென்று அணையை திறந்து வைக்கிறார். Drஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணி:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகளை தரமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

திருச்சி கோயில்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள்:

திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக ஒப்படைக்க புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. Dr ஆ. ஆனந்தகுமார் ஆசிரியர்

*நேபாளத்தில் கோர தாண்டவமாடிய திடீர் வெள்ளம்! பரபரப்பான….

நேபாளத்தின் முக்கிய பகுதிகளையும், முக்கிய ஆறுகளில் ஒன்றையும் தாக்கிய பேரழிவு திடீர் வெள்ளத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட காட்சிகள்.வெள்ளம் ஏற்படுத்திய பெரும் சேதத்தின் தீவிரத்தை *நேபாளம் பெரு வெள்ளம் – உதவி எண்கள் அறிவித்த அயலக தமிழர் நலன் துறை*Toll-Free Phone NumbersIndia: 1800 309 3793For Overseas ContactsTo contact: +91 8069009901 / 08069009901Missed call: +91 8069009900 / 08069009900 Dr ஆனந்தகுமார் ஆசிரியர்