டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு.டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை கால முன்பணம் ரூ.20,000.டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023 ஊதியம்.டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ரூ.30,284 ஊதியம்.டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 ஊதியம்-டாஸ்மாக்கில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு. இணை ஆசிரியர் இ.விஜயகுமார்
Category: தமிழகம்
பால் கொள்முதல் விலை மேலும் ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய்.
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தி ரூ.44ஆக வழங்கப்படும்.கறவை மாடுகளுக்கான இடுபொருட்களின் விலை உயர்வால் பால் கொள்முதல் விலை உயர்வு.பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் 3.15 லட்சத்துக்கும் அதிகமான பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவர்-சட்டமன்றத்தில் முதல்வர் விஜய்.கடந்த சில நாள் முன்பு ரூ.38ல் இருந்து ரூ.41ஆக உயர்த்தப்பட்ட நிலையில் கூடுதலாக ரூ.3 உயர்த்தி அறிவிப்பு. Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*30 நாட்கள் விசா இல்லா பயணம் – உஸ்பெகிஸ்தான் அதிபர் அறிவிப்பு.*
இந்திய குடிமக்களுக்கு 30 நாட்கள் விசா இல்லாமல் உஸ்பெகிஸ்தான் செல்லும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் அரசு முறைப் பயணத்தின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையில் இந்த அறிவிப்பு வெளியானது.இந்த நடவடிக்கை மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகள் மேலும் அதிகரிக்கும் என உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் தெரிவித்துள்ளார். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*
நேபாளம்: வெள்ளத்தின் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து துரிதமாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடி, பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களின் உயிரையும் காப்பாற்றினார்.காலை 9.20 மணிக்கு வெள்ள எச்சரிக்கை கிடைத்ததும், பதற்றமின்றி பள்ளியின் எச்சரிக்கை மணியை ஒலிக்க செய்து, மாணவர்களை 3 மாடி கட்டடத்தின் மேல்தளத்துக்கு அழைத்து செல்ல ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.பள்ளிக் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்ததால், பாதுகாப்பான இடமாக தேர்வு செய்தார்.துரித நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் உயிர் தப்பினர். எனினும், 2… Continue reading *நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்!*
*விபத்தில் 4 சிறார்கள் உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிதி உதவி.*
திண்டுக்கல் கொல்லப்பட்டி கிராமத்தில் பால் வேன் மோதி உயிரிழந்த 4 சிறார்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி.விபத்தில் 4 சிறார்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியறிந்து வருத்தமும், வேதனையுமடைந்தேன்.படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அஞ்சலை அம்மாளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவு – முதலமைச்சர் விஜய். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
*காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை.*
விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீர் 17.604 டி.எம்.சி.யை உடனே திறக்க உத்தரவிட வேண்டும்.காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகம் அமல்படுத்துவதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் வெறும் 9,000 கனஅடியை 15 நாட்களுக்கு திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு.காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த பாராபட்சமான உத்தரவை கூட கர்நாடக அரசு செயல்படுத்துவது இல்லை.Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.*
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ், கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.உலகம் முழுவதிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர்
நமது பத்திரிகை ஆசிரியர் டாக்டர் ஆ.ஆனந்தகுமார் அவர்களுக்கு
நமது பத்திரிக்கை ஆசிரியர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பது துணை ஆசிரியர் S.கண்ணன்Bcoml
அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகை
Dr ஆ.ஆனந்தகுமார் ஆசிரியர் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் குழு
அம்பேத்கரின் சமூக விளக்கு தமிழ் மாத பத்திரிகை இணையதளம் 28/08/2026 துவக்கம்…
A S V பத்திரிகை இணையதளம் நமது நிறுவனர் ஆசிரியர் வெளியீட்டாளர் Mr Dr ஆ.ஆனந்தகுமார் அவர்கள் வெளியீடு அவருக்கு அம்பேத்கரின் சமூக விளக்கு பத்திரிகையின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்து பல்லாண்டு வாழ குழுவின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம எழுத்தாளர் ஆ.ஷாலினி